crossorigin="anonymous">
பிராந்தியம்

தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கு வை.எம். எம்.ஏ. யில் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

(ஐ. ஏ. காதிர் கான்)

“மீலாதுன் – நபி” நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் மத விவகாரங்களுக்கான குழுவின் ஏற்பாட்டில், தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் விழா, பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் தலைமையில், நேற்று (04) சனிக்கிழமை பேரவையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும், 9 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட மற்றும் 13 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட இக்கட்டுரைப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டி முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பணப் பரிசில்களும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட மட்டத்தில் இப்போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்குத் தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவங்கள், அந்தந்த பிரதேச கிளைகளின் ஊடாக, மாவட்டப் பணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் வழங்குவதற்கான ஒழுங்குகளை, வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

இப்பரிசளிப்பு விழா நிகழ்வில், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நசாரி காமில், பேரவை மற்றும் மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டப் பணிப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: