crossorigin="anonymous">
பிராந்தியம்

பூநகரி பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை பொது நூலகத்தில் முதலாவது இலத்திரனியல் நூலகம் கடந்த திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் இலத்திரனியல் நூலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பின்தங்கிய பூநகரியில் முதலாவது இலவச கணணி மையத்துடன் கூடிய இலத்திரனியல் நூலகம் மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களிற்கான வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

இணைய வசதியுடன் கூடியதும் சலுகையுடன் அச்சிடும் வசதிகளையும் கொண்டதாக இலத்திரனியல் நூலகமாக இது உருவாகியுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, பூநகரி பிரதேச சபை பொது நூலகத்தில் முதலாவது இலத்திரனியல் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 10

Back to top button
error: