crossorigin="anonymous">
பிராந்தியம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று (23) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கை போன்ற முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு நிகழ்வாக வாணி விழாவானது கொண்டாடப்படுகிறது.

விசேட பூஜை வழிபாடுகளும் இதன் போது இடம் பெற்றதுடன் பூஜை வழிபாட்டினை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலின் பிரதம குரு மோகனகாந் சர்மா செய்தார்.

இவ் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும் பிரதேச செயலக ஏனைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: