crossorigin="anonymous">
வெளிநாடு

கனடா அரசு இந்திய தூதரக அதிகாரியை கனடாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவு

கனடா மற்றும் இந்தியா இடையே இராஜதந்திர முறுகல்

கனடா அரசு இந்திய தூதரக அதிகாரியை கனடாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது .

கனடா நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

“இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ” என்று கூறினார்.

கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, கனடா பேசிய வெளியுறவு அமைச்சர், “இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்றார்.

இந்தியா இதனை அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்தே கனடா நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா வெளியுறவு அமைச்சர் ஆகியோர் வெளிப்படையாக “இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ” என கூறியுள்ளனர்

இதன் எதிரொலியாகவே கனடா அரசு இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 7 = 9

Back to top button
error: