crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனராஜ் சுந்தர்பவன் கௌரவிப்பு

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வன்னி கோப் அனுசரனையுடன் வட மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட மடிக் கணனியை அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனுக்கு வட மாகாண ஆளுநர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், கல்வி அமைச்சின் வட மாகாண இணைப்பாளர், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: