crossorigin="anonymous">
வெளிநாடு

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2ஆம் நாள்

ராகுல் காந்தி மக்களவையில் பகல் 12 மணியளவில் உரையாற்றுவார்

இந்தியா – மணிப்பூர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் நேற்று (08) ஆரம்பமாகியுள்ளது, அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கினார்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று (09) நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ம்க்களவையில் பேசவிருக்கிறார். பகல் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பகல் 12 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை விவாதம் நீடிக்கும்.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை இதே நேரத்தில் விவாதம் நடைபெறவுள்ளதுடன் . ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: