crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘Health Tourism’ வேலைத்திட்டமொன்றை தயாரிக்க எதிர்பார்ப்பு

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க

“ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போன்ற அழகிய சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸம்” வேலைத்திட்டம் சாதகமாக இருப்பதாகவும், தாதியர் சேவையின் ஊடாகவும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நாட்டுக்கு வருமானம் தரும் வர்த்தகங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சாகல ரத்நாயக்க இதனை சுட்டிக்காட்டினார்.

சிறப்பான சேவைக்காக, தாதியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும் இதற்கு இணையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட விரிவுரையாளர் பிரமித்தா மாதவி, பொது சுகாதார அமைப்பின் செயலாளர் தாதி பெர்னி சில்வா மற்றும் தாதியர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 53 = 58

Back to top button
error: