crossorigin="anonymous">
உள்நாடுபொது

கம்பளை யுவதியை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம்

கண்டி – கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, காணாமல்போன யுவதியை கொலை செய்ததாக சந்தேகநபர் ஒருவர் வாக்குமூலமளித்துள்ளார்

கைது செய்யப்பட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண்ணை கொலை செய்ததாக வாக்குமூலமளித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா எனும் யுவதி, தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, ​​ஆடு மேய்க்கின்ற நபர் ஒருவர் அவரை பலவந்தம் செய்ய முயன்ற நிலையில் அப்பெண் அதற்கு தொடர்ச்சியாக தனது மறுப்பை வெளியிட்டபொது அப்பெண்ணை ​​காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யுவதியின் சடலத்தை புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்த போதிலும், யுவதியின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவத்தினமன்று யுவதி பணி புரியும் நிலையத்தின் சாவியும் அவளிடம் இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை 11.00 மணியாகியும் பணியிடத்திற்கு வருகை தராததால் பணியிடத்தின் உரிமையாளர் யுவதி பாத்திமா எங்கே எனக் கேட்டு வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததால் அவர் வேலைக்குச் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதன்பின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களிலும் உறவினர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் அவரைத் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கபெற்றிருக்கவில்லை

மருந்தகத்தின் சாவியும் அவளிடம் இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை 11.00 மணியளவில் அதன் உரிமையாளர் பாத்திமா எங்கே எனக் கேட்டு வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததால் அவர் வேலைக்குச் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் CCTV கமெராவில் பாத்திமா வீதியில் செல்வதைக் காணக்கூடியதாக இருந்த போதிலும் அதனைத் தொடர்ந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள CCTV கமெராவில் அவர் செல்வது பதிவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + = 18

Back to top button
error: