crossorigin="anonymous">
பிராந்தியம்

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றுள்ளது

மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் திரு.க.விமலநாதன் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலையினை அணிவித்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.

பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.க.விமலநாதன், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல்ப் பணிப்பாளர் திருமதி.ம.கிரேசியன் வில்வராஜா, கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த பொறியியலாளர் வவுனிக்குளம் திரு.கை.பிரகாஸ் மற்றும் மு/பாலிநகர் மகாவித்தியாலய அதிபர் திரு.ஶ்ரீகமலநாதன் அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆரணி நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும்,மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 73

Back to top button
error: