crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 30ஆவது நினைவு தினம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 30ஆவது நினைவு தினம் இன்று (01) காலை கொழும்பு புதுக்கடை ரணசிங்க பிரேமதாசவின் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்றது.

ரணசிங்க பிரேமதாச நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையாற்றிய போது 1993 ஆம் ஆண்டு மே 01 நாளில் கொலை செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தலைமையில் இன்று அன்னாரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 86 =

Back to top button
error: