crossorigin="anonymous">
பிராந்தியம்

முல்லைத்தீவு செயலகத்தில் உற்பத்தித்திறன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் இந்த வெற்றிக்கு பாடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட உற்பத்தித்திறன் பிரிவுக்கு பொறுப்பான பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. க.லிங்கேஸ்வரனின் ஒருங்கிணைப்பிலும் ஏற்பாட்டிலும் சிறப்புற நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் “முல்லைச் சாகரம் ” என்னும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுவைத்தார். இச் சஞ்சிகையானது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி ), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.எம்.முபாரக், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி.லிசோ கேகிதா, பதவிநிலை நிலை உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: