crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

‘கிழக்கு மற்றும் மேற்கு பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு மற்றும் மேற்கு பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கு நாளை (12) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கொழும்பு, 24 ஹோர்டன் பிளேஸில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் லைட்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஃபரீனா ருஸைக், சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம், தெஹ்ரான், ஈரான் பெண்கள் மற்றும் குடும்ப ஆய்வுகளில் கலாநிதி பட்டம் பெற்ற Zahirah mirjafari, கலாநிதி மரீனா தாஹா ரெஃபை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்ச்சியை saturday express தலைமை ஆசிரியர், ஹனா இப்ராஹிம் அவர்கள்  நெறிப்படுத்தவுள்ளார்.

இந்நிகழ்வில்  பங்கேற்க விரும்பினால் முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீன், 077 261 2288, அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 4 =

Back to top button
error: