crossorigin="anonymous">
பிராந்தியம்

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு அலுவலகம்

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகம் உத்தியோக பூர்வமாக நேற்று (24) திறந்துவைக்கப்பட்டது

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன ,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.இ.சசீலன், ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன், வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. சுவாஸ்கரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. ஜெயகாந், மாகாண உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி .யாமினி, நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கரைதுறைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர்,அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 61

Back to top button
error: