crossorigin="anonymous">
பிராந்தியம்

75 குடும்பங்களுக்கு காணி அளிப்புப் பத்திரம் கையளிப்பு

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வு நேற்று (04) முல்லைத்தீவு மாவட்ட நிகழ்வாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 75 குடும்பங்களுக்கு காணி அளிப்புப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். குணபாலன்( காணி ) , உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் கலந்து கொண்டனர்

உலக உணவுத்திட்ட மாவட்ட பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமில் கிளையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 29 = 37

Back to top button
error: