crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு காலி முகத்திடளுக்குள் பிரவேசிக்க தடை

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது

அனுமதி பெறாத நபர்கள் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரையில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளமையினால், அவர்களின் பாதுகாப்புக் கருதியும் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாலும் தடை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 4

Back to top button
error: