crossorigin="anonymous">
பிராந்தியம்

தரம் 11 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புகள்

(நதீர் சரிப்தீன்)

*பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை, மற்றும் பழைய மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்.பலாங்கொடை இர/ஜெய்லானி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்விக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.எஸ்.எம்.நதீர் தலைமையில் விஷேட வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.மன்ஸூர் தெரிவித்தார்.

இதில் ஓர் அங்கமாக மாணவ மாணவிகளுக்கான இரவு நேர கற்றல் கற்பித்தல் வகுப்புகள் நடாத்தப்படவுள்ளன இவ்வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் இன்று (02) திங்கட்கிழமை ஆரம்பமாகும்.

தினமும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் ஐந்து நாட்களும் மாலை 06.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை விஷேட கால அட்டவணைகேற்ப வகுப்புகள் நடைபெறும்.

கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச வளவாளர்களைக் கொண்டு வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 29

Back to top button
error: