crossorigin="anonymous">
ஆக்கங்கள்

பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு” எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு கொழும்பு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

கௌரவ அதிதிகளாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

அகில இந்திய யூனியன் ஒப் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொள்வார் என முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 38 =

Back to top button
error: