crossorigin="anonymous">
பொது

கோப், கோபா, அரசாங்க நிதி பற்றிய குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள்

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட புதிய உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கடமையாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேக்கர மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) கடமையாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரசன்ன ரணவீர மற்றும் கௌரவ வேலு குமார் ஆகியோரின் பெயர்கள் தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், அரசாங்க நிதி பற்றிய குழுவில் கடமையாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா மற்றும் கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 61

Back to top button
error: