crossorigin="anonymous">
வெளிநாடு

கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார்

தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்

இந்தியா – கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அஜய் என்பவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் சன்மானத்தையும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

சாகர் ராணா எனும் 23 வயதாகும் முன்னாள் தேசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் இந்த மாத தொடக்கத்தில் டெல்லியிலுள்ள மைதானம் ஒன்று வாகன நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டார். சாகர் ராணாவுக்கும் சுசில் குமார் உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த சண்டையின்போது அவர் கொல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுசில் குமார் 2012 லண்டன் ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கமும், 2016 பெய்ஜிங் ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கமும் வென்றவர்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 75 =

Back to top button
error: