crossorigin="anonymous">
பொது

‘அரசியலமைப்பு பேரவை’ ஸ்தாபிப்பதற்கு கலந்துரையாடல்

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்குவதற்கு கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ எதிர்கட்சித் தலைவர் இணக்கம் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − = 36

Back to top button
error: