crossorigin="anonymous">
பொது

‘இரட்டை பிரஜாவுரிமை தேர்தல் ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்றம் அன்றி தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்வது தேர்தல் ஆணைக்குழுவே என்பதால் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவொரு பிரஜைக்கும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தால் நீதிமன்றம் முன்னிலையில் அதனை சவாலுக்குட்படுத்தும் உரிமையுள்ளதாகவும் இதற்கு முன்னர் இவ்வாறு இந்த விடயங்கள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: