crossorigin="anonymous">
பொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றது அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம்

2022 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில் பொருளாதாரத்தை திடமாகக் கட்டியெழுப்புதல், அரச சேவையை வினைத்திறனாக விருத்தி செய்தல் மற்றும் அரச வளங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்துடன் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போது காணப்படுகின்ற ஒருசில சட்டங்களின் ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, திறைசேரியின் கீழ் காணப்படும் கட்டுப்பாட்டாளர் தலைமையதிபதி அலுவலகத்தின் பணிகளை விரிவாக்கம் செய்து அதற்குரிய சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும், தேசிய சொத்துக்கள் ஆவணத்தைத் தயாரிப்பதற்கும் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பாக மையப்படுத்திய தரவுத்தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்தல்

1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டம் இதற்கு முன்னர் ஒருசில சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் மற்றும் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையிலும் குறித்த சட்டத்தை மேலும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுதேச மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்காக ஆயுள்வேத திணைக்களத்தின் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக மற்றும் ஆராய்ச்சி மூலிகைப் பூங்காக்களை உருவாக்கல் போன்ற பணிகளுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக ‘ஜன சபை முறைமையை’ நிறுவுவதற்காக ‘தேசிய ஜன சபை தேசிய செயலகத்தை’ தாபித்தல்

இலங்கையில் இதுவரை நடைமுறையிலுள்ள பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பின் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் போதியளவு விழித்துக் கூறப்படாமையால், இம்முறைமையில் ஆட்சி மையம் மற்றும் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகள் விலகிச் சென்று கொண்டிருப்பதால், கொள்கைத் தீர்மானங்களை எடுக்கின்ற செயன்முறையில் பொதுமக்களின் கருத்துக்களுக்கு போதுமானளவு செவிமடுக்காமையாலும், அது தொடர்பாக சமூகத்தில் விமர்சனங்களும் உருவாகி வருகின்றமையாலும், குறித்த விமர்சனங்களின் அடிப்படையில் சமூகத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உருவாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலைமையில் கிராமிய மட்டத்தில் பங்கேற்பு ஜனநாயகப் பண்புகளுடன் இயங்குகின்ற நிறுவனக் கட்டமைப்பொன்றில், அரச அலுவலர்களும் மற்றும் பொது மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள பிரச்சினைகளைக் கலந்துரையாடக் கூடிய, அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானிக்கக் கூடிய மற்றும் கிராமிய மக்களுக்கு தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் பங்கேற்கக் கூடிய பலம்வாய்ந்த பொறிமுறையொன்று தேவையாகும்.

அரச கொள்கை வகுப்புக்காக மக்களுக்கு தமது கருத்துக்களை முனைப்பாக வழங்கக் கூடியதாக இருக்கின்ற மற்றும் சமூகப் பங்கேற்புடன் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய பொறிமுறையின் மூலம் அதிகாரிகள்வாதம் மற்றும் தன்னிச்சையான அரசியல்மயப்படுத்தல் மூலம் நிகழக்கூடிய பொதுமக்கள் அழுத்தங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் தடுப்பதற்கு இயலுமாகும். அதற்கமைய, அரச கொள்கை வகுப்பு மற்றும் குறித்த கொள்கையை வெற்றிகரமாக அமுலாக்குவதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் பெற்றுக்கொள்ளக் கூடிய சுயாதீன நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைமையில் ‘ஜன சபை முறைமை’ தொடர்பான கொள்கைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ‘கிராமிய ஜன சபை’ நிறுவுவதற்கும், தேசிய மட்டத்தில் ‘தேசிய ஜன சபை’ நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள ‘ஜன சபை முறைமை’ அரசானது அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்வதற்கும், ‘ஜன சபை முறைமை’ நிறுவுவதற்காக தேசிய மட்டத்தில் சுயாதீன கேந்திர நிறுவனமாக ‘தேசிய ஜன சபை செயலகம்’ தாபிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவொன்று நியமித்தல்

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அங்கத்தவர்களுடன் கூடியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் – பிரதமர்
• கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் – கடற்றொழில் அமைச்சர்
• கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
• கௌரவ அலி சப்ரி அவர்கள் – வெளிவிவகார அமைச்சர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − 86 =

Back to top button
error: