crossorigin="anonymous">
பொது

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

அநுராதபுரம் – பாதெனிய வீதியில் எல்ல பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கி இன்று மு.ப. 10.00 மணியளவில் பயணித்த கார் ரிதிபதியெல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த புளியமரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுது

விபத்தில் 3 வயதுடைய அதிஷ மனுல, சுனந்த வர்ணகுலசூரிய (74), எம்.எம். லீலாவதி (70) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாகொல்லாகம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − = 79

Back to top button
error: