crossorigin="anonymous">
பிராந்தியம்

சாய்ந்தமருதில் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அல்-அமீன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (17) திங்கட்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இத்திட்டத்திற்கான நிதி உதவியினை சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் வழங்குகின்றது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவ ஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ. கபூர், திட்ட உதவியாளர் எம்.எம்.எம். முபாறக், வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நெளஷாட், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத்,

சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ரம்ஸா, சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசால், கணனி உதவியாளர் (பயிற்சி) எஸ். சாபித் அக்மல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 60

Back to top button
error: