crossorigin="anonymous">
பிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் Action unity Lanka நிறுவன அனுசரனையுடன் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.

தரம் பத்து மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண மாணவர்களுக்கான செயலமர்வில் சுமார் ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இச் செயலமர்வின் வளவாளர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களான சிவப்பிரியா மற்றும் L.றஜனிகாந் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பரீட்சை விடுமுறைக்காலத்தை பயன்படுத்துகின்ற முறைமைகள், உயர்தரத்தில் மாணவர்களின் பாடத்தெரிவுகள், தற்போதைய சூழலுக்கு பொருத்தமான தொழில் ஒன்றை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்ய வேண்டும், எங்கு குறித்த பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்யலாம், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டனர்.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 7

Back to top button
error: