crossorigin="anonymous">
வெளிநாடு

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று (19) காலை நடைபெறவுள்ளது

அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ் டர் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த ராணிக்கு, இன்று காலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்(96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதிஉயிரிழந்தார்.

இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் செல்வர்.

அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்துஅழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 18 = 25

Back to top button
error: