crossorigin="anonymous">
பிராந்தியம்

சமுர்த்தி வங்கி புதிய கட்டிட நிர்மாண அடிக்கல் நடும் நிகழ்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (13) முள்ளிப்பொத்தானையில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் சமுர்த்தி வங்கிக் கட்டிடமானது திருகோணமலை கண்டி பிரதான வீதி முள்ளிப்பொத்தானையில் உள்ள வங்கிக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தற்போது செயற்பட்டு வரும் சமுர்த்தி வங்கியில் போதிய இடவசதியின்மை காரணமாக மக்களுக்கான வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றன.இப்புதிய வங்கி நிர்மாணிக்கப்படல் மூலம் ஒரே கூரையின் கீழ் வழங்கும் சேவையை மேலும் வினைத்திறனுடன் வழங்க ஏதுவாக அமையும்.

நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார, மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதீஸ்னர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் கே.நபீல், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஹஸ்புல்லா உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − 34 =

Back to top button
error: