crossorigin="anonymous">
பொது

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – லக்ஷமன் கிரியெல்ல

போராட்டத்தில் கைது செய்யப்பட்டப் போராட்டக்காரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல நேற்று (09) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் பலிவாங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளைஞர்கள் போராட்டம் நியாயமானது என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு தப்பிச் சென்றார்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவருக்கும் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 52 = 59

Back to top button
error: