crossorigin="anonymous">
உள்நாடுபொது

கடந்த 24 மணித்தியாலாத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1027 பேர் கைது

கடந்த 24 மணித்தியாள காலப்பகுதியல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (12) காலை தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இது தொடர்பாக 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தலங்கம பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்றைய தினம் (11) நடத்தப்பட்ட கண்காணிப்பின்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று வீதி தடைகளை ஏற்படுத்தி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று இவர்கள் வந்த 1024 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மாகாண எல்லைகளை மீறி பயணித்த 91 பேர் இவர்கள் வந்த வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 27

Back to top button
error: