crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட புகையிரத சேவை

யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விசேட புகையிரத சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களுக்கும் இந்தச் புகையிரத சேவை மிகவும் வரப்பிரசாதமாகும்.

புகையிரத சேவையினை மாங்குளம் வரையிலோ வவுனியா வரையிலோ விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 + = 47

Back to top button
error: