crossorigin="anonymous">
பொது

நீதிமன்ற அவமதிப்புக்கு புதிய சட்ட வரைபு

இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதிமன்ற அவமதிப்புக்கான குற்றம் வரையறுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் அவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கும், தீர்ப்பதற்கும் தெளிவான மற்றும் சீரான நடைமுறைகள் தற்போது நாட்டில் பின்பற்றப்படுவதில்லை.

இதன் காரணமாக, நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதற்கான வரம்புகள் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் கீழுள்ள வரையறைகளை புரிந்துகொள்வது கடினம் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சட்டத்தை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானதாக இருக்கலாம்.

இலங்கை சட்ட ஆணைக்குழுவினால் தகுந்த சட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பூர்வாங்க வரைவின் அடிப்படையில் புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக்கு உரிய யோசனையை சமர்ப்பித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 77 = 80

Back to top button
error: