crossorigin="anonymous">
பிராந்தியம்

கும்புக்கந்துறை அல்ஹிக்மாவின் அதிபராக எப்.எம்.ரஷாத்

கண்டி – கும்புக்கந்துறை அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய அதிபராக மீண்டும் எப்.எம். ரஷாத் (நளீமி) அவர்கள் நேற்று (28) செவ்வாய்க்கிழமை தமது கடமைகளை முன்னாள் அதிபர் ஐ.எம். ஸமீர் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக்கொண்டார்.

இதுவரை காலமும் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்ட பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ.எம்.ஸமீர் அவர்களுக்கு பாடசாலை சார்பிலும் ஊர் மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிககள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் ஐ.எம்.ஸமீர், பிரதி அதிபர், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், KSDT உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், பள்ளிவாயல்களின் நிர்வாக உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஊர் ஜமாஅத்தினர்கள், பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: