crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு – சாலை பகுதியில் கைவிடப்பட்ட மோட்டார் எறிகணைகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலை பகுதியில் மோட்டார் எறிகணைகள் சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (11) கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப் பகுதியில் போரின்போது கைவிடப்பட்ட 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 14, 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு 1, அதற்குரிய வூஸ்டர் ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது

குறித்த எறிகணைகள் முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட பின்னர்  செயலிழக்கச் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 51 = 53

Back to top button
error: