crossorigin="anonymous">
வெளிநாடு

ஜப்பான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஜப்பான் அரசாங்கம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது அதன்படி கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறும்போது

“அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குகிறோம்.

இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும்.

படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு ஜப்பானுக்கு சுற்றுலா வருபவர்கள் கொரோனா வைரஸ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும், பூஸ்டர் தடுப்பூசியையும்  போட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 + = 85

Back to top button
error: