crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கிரான்குளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் நான்கு பெண்கள் அடங்களாக 21பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இரண்டு படகுகளையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவு எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களும் படகும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + = 14

Back to top button
error: