crossorigin="anonymous">
வெளிநாடு

கவச ஆடையுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் மரணம்

அமெரிக்கா – நியூயார்க் மாகாணத்திலுள்ள பஃப்பலோ (Buffalo) நகரில் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் நேற்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள்

சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அதிநவீன துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கவச ஆடை, தலைக்கவசம் போன்றவற்றை அணிந்திருந்ததாகவும் அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்தனர்

இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக அமெரிக்க போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை “வன்முறையான பயங்கரவாத செயல்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அழைக்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 66 = 74

Back to top button
error: