crossorigin="anonymous">
வெளிநாடு

கனடாவில் 4 பேர் பலியான சம்பவத்துக்கு நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்

கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.

இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களை பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

கொரோனா பெருந்தொற்றால் மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த கனடா மக்களுக்கு தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், குடியேறி முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து டிரக் மோதி நடந்த தாக்குதல் கனடாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 12 = 22

Back to top button
error: