crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க நியமணம்

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், பிரதமரின் செயலாளராக திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க அவர்கள், இன்று (12) கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு. ஏக்கநாயக்க அவர்கள், இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார்.

இவர் தனது 30 வருடங்களுக்கும் அதிகமான நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும் சேவையாற்றியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: