crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள்

இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று (09) அதிகாலை நாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பீஜிங்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட இந்த தடுப்பூசிகள், பாதுகாப்பான முறையில் பிரதான சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மாதத்தில் மூன்று மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குடும்ப சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 14

Back to top button
error: