crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைய மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த பேச்சுவார்த்தை

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கையின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய நாடுகளுடன் ராஜதந்திர அடிப்படையில்  கலந்துரையாடப்பட்டவுள்ளது.

சுற்றுலா பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும்போது ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − 90 =

Back to top button
error: