crossorigin="anonymous">
பிராந்தியம்

எழுத்தாளர் வாண்மை விருத்திச் செயலமர்வு

எழுத்தாளர்கள் வாண்மை விருத்திச் செயலமர்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் பி.ப.1.00 மணி வரை கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, பேராசிரியர் செ.யோகராசா, எழுத்தாளர் ஜிப்ரிஹாசன், கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மங்கல விளக்கேற்றலோடு ஆரம்பமாகிய நிகழ்வில் வரவேற்புரையும் தலைமையுரையும், எழுத்தாளர்கள் அறிமுகம், கவி பாடும் நிகழ்வு, பிரதம அதிதியுரை, எழுத்தாளர்கள் விரிபடு எல்லைகள், ஆவணப்படம் திரையிடல், எழுத்தும் திசை நோக்கும், கலந்துரையாடல், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என்பனவற்றுடன், இறுதியாக நன்றியுரைடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று முடிவடைந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: