crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீர் விநியோக பட்டியல் கட்டணத்தை செலுத்த ஒரு மாத கால அவகாசம்

பாவனையாளர்களுக்கு நீர் விநியோகத்திற்கான பட்டியல் கட்டணத்தை செலுத்துவதற்காக  ஒரு மாத கால அவகாசம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று (06) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் ,

பயண கட்டுப்பாடுகள் காரணமாக தமது நீர் விநியோக கட்டண பட்டியலை செலுததுவதற்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை பொது மக்ககளுக்கு உண்டு. இதனால் கட்டணத்தை செலுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் ஒரு மாத நிவாரணக்காலம் வழங்கப்படும். அத்தோடு இக்காலப்பகுதியில் வாடிக்கையாளர்களின் நீர் வியோகம் துண்டிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: