crossorigin="anonymous">
உள்நாடுபொது

7 மணித்தியாலம் 30 நிமிட மின்வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மொத்தமாக 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய -மு.ப. 8.00 – பி.ப. 1.00 மணி வரை, பி.ப. 1.00 – பி.ப. 6.00 மணி வரை
முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும் பி.ப. 6.00 – பி.ப. 8.30 மணி வரை, பி.ப. 8.30 – பி.ப. 11.00 மணி வரை இரண்டாம் கட்டத்தில் 2½ மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 6

Back to top button
error: