crossorigin="anonymous">
உள்நாடுபொது

அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத வீதி 6 மாதத்துக்கு மூடல்

இந்தியாவின் நிதியுதவியுடன் அநுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படுமென்றும், பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை விசேட ரயில் சேவை நடைபெறுமென்றும் யில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் அந்த பஸ் சேவை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் என்றும் யில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 20

Back to top button
error: