crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

கண்டி- மடவள வங்குவக்கட பிரதேசத்தில் இன்றையதினம் (07) வீடொன்றின் சுவர் அமைப்பதற்காக அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீடொன்றின் பின் சுவர் அமைப்பதற்காக அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலத்திற்குள் புதையுண்டிருந்த நால்வரையும் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பன்வில, பூஜாபிட்டி, கெட்டபுல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 + = 87

Back to top button
error: