crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொது இடங்களுக்கு தடுப்பூசி பெறாதவர்கள் நுழைய தடை

இலங்கையில் பொது இடங்களுக்கு முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் நுழைவதை தடுக்கும் காலத்திற்கு காலம் திருத்தப்படும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தளுக்கு அமைய, ஏப்ரல் 30 முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டு, காலத்துக்கு காலம் திருத்தப்பட்டு வரும் குறித்த அதி விசேட வர்த்தமானி இவ்வாறு மீண்டும் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி, வயதெல்லை, தடுப்பூசி ஏற்றலில் இருந்து விலக்களிப்பு தொடர்பான வரையறைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 1

Back to top button
error: