crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுதந்திர தின வைபவத்தில் மயக்கமடந்தவர்களால் பரபரப்பு

இருபதுக்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கம்

இலங்கையின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்வில் அணி நடையில் கலந்து கொள்ள வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற் படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர்.

சுதந்திரதின நிகழ்வில் அதிக நேரம் வெயிலில் நின்றமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் நிகழ்வுக்ள தொடர்ந்தும் இடம்பெற்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 35

Back to top button
error: