crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழுள்ள அதிகாரத்திற்கமைய இன்று (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் 20 பேர், கேகாலை சிறைச்சாலையில் 18 பேர், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 பேர், களுத்துறை சிறைச்சாலையில் 13 பேர், போகம்பர சிறைச்சாலையில் 11 பேர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 பேர், வாரியபொல சிறைச்சாலையில் 10 பேர் உள்ளிட்ட நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிருந்து 197 பேர்  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 3

Back to top button
error: