crossorigin="anonymous">
உள்நாடுபொது

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரின் நெருங்கிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சபாநாயகர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

வெலிகம மற்றும் வெலிபிட்டி பகுதிகளில் பல்வேறு பொது நிகழ்வுகளில் சபாநாயகர் கடந்த புதன்கிழமை (26) தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 3 =

Back to top button
error: