crossorigin="anonymous">
உள்நாடுபொது

74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று (29) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைவாக சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை, நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.

குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் பல வீதிகளில் இடைக்கிடையே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 + = 67

Back to top button
error: